தெலங்கானா ஆளுநர் தமிழிசையுடன் சரத்குமார் - ராதிகா தம்பதியினர் சந்திப்பு 

தெலங்கானா ஆளுநர் தமிழிசையை, சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் சரத்குமார் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான ராதிகா இருவரும் சந்தித்துப் பேசினர்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசையுடன் சரத்குமார் தம்பதியினர் சந்திப்பு
தெலங்கானா ஆளுநர் தமிழிசையுடன் சரத்குமார் தம்பதியினர் சந்திப்பு

ஹைதராபாத்: தெலங்கானா ஆளுநர் தமிழிசையை, சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் சரத்குமார் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான ராதிகா இருவரும் சந்தித்துப் பேசினர்.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் இம்மாதம் 8-ஆம் தேதியன்று தெலங்கானா ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார். அதையடுத்து பலவாறு தரப்பினரும் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகிறார்கள்.     

அந்த வரிசையில் புதனன்று தெலுங்கானா ராஜ்பவனில் தெலுங்கானா ஆளுநர் டாக்டர்.திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் திரு.சரத்குமார் அவர்களும் திருமதி.ராதிகா சரத்குமார் அவர்களும் நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்

ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com