அக்.6-இல் திமுக பொதுக்குழு கூட்டம்

திமுகவின் பொதுக்குழு கூட்டம் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.


திமுகவின் பொதுக்குழு கூட்டம் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வியாழக் கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
திமுக பொதுக்குழு கூட்டம் அக்டோபர் 6-ஆம் தேதி ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும். 
கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்க உள்ளார்.  கட்சியின் ஆக்கப் பணிகள், சட்ட திட்ட திருத்தம், தணிக்கைக் குழு அறிக்கை அளித்தல் உள்ளிட்ட நிரல்கள் நடைபெறும். பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் தவறாது பங்கேற்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அறிவாலயத்துக்கு வெளியில்: இதுவரை, திமுக பொதுக்குழு கூட்டம் அறிவாலயத்திலேயே நடைபெற்று வந்தது. முதல் முறையாக ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற உள்ளது. பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால் அறிவாலயத்தில் நடைபெறாமல், ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற உள்ளது.
துரைமுருகனுக்கு புதிய பதவி: திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவரால் கட்சிப் பணிகளில் ஈடுபட முடியாத சூழல் உள்ளது. எனினும், அந்தப் பதவியிலேயே அவர் நீடிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கருதுகிறார்.
அதனால், திமுகவில் இணைப் பொதுச்செயலாளர் பதவி ஒன்று உருவாக்கப்பட உள்ளது. அந்தப் பதவி தற்போது பொருளாளராக உள்ள துரைமுருகனுக்கு அளிக்கப்பட உள்ளது. பொருளாளர் பதவி எ.வ.வேலுவுக்கு அளிக்கப்பட உள்ளது.
அரசியல் சூழல்: தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகவும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com