மேட்டூர் அணை நீர்மட்டம் 13 நாள்களாக 120 அடியாக நீடிக்கிறது

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 13-ஆவது நாளாக  120 அடியாக நீடிக்கிறது. 
தொடர்ந்து 13 -ஆவது நாளாக 120 அடியாக நீர் மட்டம் நீடிக்கும் மேட்டூர் அணை.
தொடர்ந்து 13 -ஆவது நாளாக 120 அடியாக நீர் மட்டம் நீடிக்கும் மேட்டூர் அணை.


மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 13-ஆவது நாளாக  120 அடியாக நீடிக்கிறது. 
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும்,  கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும் பெய்த பலத்த  மழை காரணமாக கபினி,  கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதால் உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டது.  
உபரிநீரின் வரத்துக் காரணமாக 39 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 7-ஆம் தேதி 120 அடியாக உயர்ந்தது. 
அப்போது முதல் அணையின் நீர்மட்டம் குறையாமல் கடந்த 13 நாள்களாக 120 அடியாகவே நீடிக்கிறது.
வெள்ளிக்கிழமை மாலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது.  
அணைக்கு விநாடிக்கு 13, 000 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியிலிருந்து 8 ஆயிரம் கனஅடியாக மாலை 3 மணிக்குக் குறைக்கப்பட்டது.  
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.  அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com