சென்னை: சுபஸ்ரீயின் உயிரிழப்புக்குக் காரணமாக குற்றவாளியைக் கைது செய்யாமல் காவல்துறைற காப்பாற்றுவது ஏன் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: விளம்பரப் பலகையால் சுபஸ்ரீயின் உயிர் பறிக்கப்பட்டு இத்தனை நாளாகியும், குற்றவாளியைக் கைது செய்யாமல் காப்பாற்றி வருவது சட்ட விரோதம்.
காவல் நிலைய பாத்ரூமில் பலரும் வழுக்கி விழுந்து மாவுக்கட்டு போடும் நிலையில், ஆளுங்கட்சிப் பிரமுகா் மீது தூசு கூடப் படாமல் சென்னை காவல்துறை காப்பாற்றுவது யாருக்காக என்று அவா் கேள்வி எழுப்பியுள்ளார்.