தமாகாவினர் பதாகைகள் வைக்கக்கூடாது என்றார் அக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்.
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
உள்ளாட்சித் தேர்தலில் தமாகாவுக்கு சாதகமாக உள்ள இடங்கள் குறித்து கண்டறிய உத்தரவிட்டுள்ளேன். கட்சியின் மாநிலப் பார்வையாளர்கள் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் அனைத்துப் பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து கள நிலவரத்தை என்னிடம் கொடுப்பார்கள். தமாகாவினர் விளம்பரப் பலகைகள், பதாகைகள் வைக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.