நான்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: மனோஜ் பாண்டியன், ஆர். லட்சுமணன் விருப்ப மனு

நான்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. 
நான்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: மனோஜ் பாண்டியன், ஆர். லட்சுமணன் விருப்ப மனு


நான்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. 

தமிழகத்தில் காலியாகவுள்ள நான்குனேரி, விக்கிரவாண்டி ஆகிய பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, இடைத்தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் இன்றும், நாளையும் விநியோகம் செய்யப்படும் என திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டன. 

அதன்படி, அதிமுக சார்பில் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகம் இன்று காலை தொடங்கியது. இதில், நான்குனேரி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன் விருப்ப மனு அளித்துள்ளார். இதேபோல், விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் எம்.பி ஆர். லட்சுமணன் விருப்பம் மனு அளித்துள்ளார்.

அதிமுக சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோர் நாளை பிற்பகல் 3 மணி வரை விருப்ப மனுக்களைப் பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம். அதன்பிறகு, வேட்பாளருக்கான நேர்காணல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறுகிறது.

இதனிடையே, கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நான்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் இன்று வெளியிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com