தமிழகத்தில் நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் தகவல்

தமிழகத்தில் வரும் நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் தகவல்


தமிழகத்தில் வரும் நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தேவைப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களை பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் நிலையில் வைக்கும் பணியை அக்டோபர் 15க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் மும்முரம் காட்டி வருகிறது. வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களை அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com