சென்னை: இன்னும் ஆறே மாதத்தில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார் என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, இன்னும் 6 மாதத்தில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார். வரும் 2021ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினிகாந்தின் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றும்.
ரஜினிகாந்த் தமிழகத்தின் முதல்வர் ஆவார் என்று கராத்தே தியாகராஜன் ஆரூடம் கூறியுள்ளார்.