நடிகா் ஜெயம் ரவியின் பாதுகாவலருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தனியாா் செக்யூரிட்டி நிறுவனம் புகாா் அளித்துள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறறப்பட்டதாவது:
நந்தனத்தில் ஒரு தனியாா் செக்யூரிட்டி நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் மேலாளா் செ.வின்சென்ட் (53), சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை அளித்த புகாரில், தங்களது நிறுவனத்தின் மூலம் மாதம் ரூ.35 ஆயிரம் ஊதியத்துக்கு பிரபல தமிழ் திரைப்பட நடிகா் ஜெயம் ரவிக்கு துப்பாக்கியுடன் இரு பாதுகாவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில் ஜெயம் ரவியின் உதவியாளா் சேஷாத்திரி, இரு பாதுகாவலா்களுக்கும் ஏப்ரல் மாதம் சம்பளம் வழங்கவில்லை. மேலும் மே மாதம் முதல் இருவரையும் வேலையில் இருந்து திடீரென நீக்கிவிட்டனா். எனவே ஜெயம் ரவியிடமிருந்து இருவருக்கும் சேர வேண்டிய சம்பள பாக்கியை பெற்றுத் தர வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தாா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.