குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தூத்துக்குடி பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தூத்துக்குடி பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 11 நாள்கள் நடைபெறும் இத்திருவிழா நிகழாண்டு செப். 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக அக்டோபர் 8-ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறும். 9-ஆம் தேதி காப்பு அவிழ்த்தலுடன் திருவிழா நிறைவு பெறும். 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்கும் இவ்விழாவில் 1,000-க்கும் மேற்பட்ட தசரா குழுவினர் பல்வேறு வேடங்கள் அணிந்து வீதிதோறும் கலைநிகழ்ச்சிகள் நடத்தி அம்மனுக்கு காணிக்கை வசூலிப்பர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com