தூத்துக்குடி பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 11 நாள்கள் நடைபெறும் இத்திருவிழா நிகழாண்டு செப். 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக அக்டோபர் 8-ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறும். 9-ஆம் தேதி காப்பு அவிழ்த்தலுடன் திருவிழா நிறைவு பெறும். 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்கும் இவ்விழாவில் 1,000-க்கும் மேற்பட்ட தசரா குழுவினர் பல்வேறு வேடங்கள் அணிந்து வீதிதோறும் கலைநிகழ்ச்சிகள் நடத்தி அம்மனுக்கு காணிக்கை வசூலிப்பர்.