இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம்: மு.க.ஸ்டாலின்

விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக தலைவர்  ஸ்டாலின்
திமுக தலைவர்  ஸ்டாலின்

விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அண்ணா அறிவாலயத்துக்கு சனிக்கிழமை வந்தார். 
அவருடன் நான்குனேரி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, கிருஷ்ணசாமி ஆகியோரும் வந்தனர். மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ரூபி மனோகரன் வாழ்த்துப் பெற்றார். 
அதைத் தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியது:
காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தேர்தல் அணுகுமுறை குறித்து ஆலோசித்தோம். நான்குனேரி தொகுதியில் கடந்த சட்டப் பேரவைத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ரூபி மனோகரன் வெற்றிபெறுவார். 
நான்குனேரியில் அக்டோபர் 9,10, 15, 16-ஆம் தேதிகளில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளேன். அதிமுக அரசின் ஊழலையும் மத்திய அரசின் சர்வாதிகாரத்தையும் மக்களிடம் எடுத்து வைத்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com