தமிழின மக்கள் ஒன்றுபட்டு ஒரே குரலில் பேசினால்? ப.சிதம்பரம் ட்வீட்

ப.சிதம்பரம் சார்பாக அவரது கருத்துக்களை குடும்பத்தினர் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். 
தமிழின மக்கள் ஒன்றுபட்டு ஒரே குரலில் பேசினால்? ப.சிதம்பரம் ட்வீட்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த மாதம் 21-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், தற்போது நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து ப.சிதம்பரம் சார்பாக அவரது கருத்துக்களை குடும்பத்தினர் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

இந்நிலையில், தமிழின மக்கள் ஒன்றுபட்டு ஒரே குரலில் பேச வேண்டும் என்று ப.சிதம்பரம் கருத்து ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை பதிவிடப்பட்டது. அதில்,

தமிழின மக்கள் ஒன்றுபட்டு ஒரே குரலில் பேசினால், தமிழ் மொழியின் மேன்மையையும், தமிழ் கலாச்சாரத்தின் உயர்வையும் அனைவரும் ஏற்பார்கள் என்று ப.சிதம்பரம் சார்பாக அவரது குடும்பத்தினர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com