நான்குனேரி சட்டப் பேரவை தொகுதிக்கான இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சிறப்பான வெற்றியை பெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் சனிக்கிழமை அளித்த பேட்டி:
நான்குனேரி இடைத் தேர்தலில் சிறப்பான வெற்றியைப் பெறுவோம். மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுக்க மாட்டோம்.
எங்களால் நிறைவேற்ற முடிந்த வாக்குறுதிகளை மட்டுமே கொடுப்போம். காங்கிரஸூக்கு எதிராகத் தொடர்ந்து பேசி வரும் கராத்தே தியாகராஜனை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்காதது குறித்து கேட்கிறீர்கள். இதுகுறித்து அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும் என்றார் அவர்.