நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கில் ராகுல், பிரவீன், அபிராமி ஆகிய மேலும் 3 மாணவர்கள் உள்பட 5 பேரை சிபிசிஐடி போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
இதையடுத்து, நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த தர்மபுரி மாணவர் இர்ஃபானை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இர்ஃபான் வெளிநாடு தப்பிச் சென்றாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக சிபிசிஐடி எஸ்.பி.விஜயகுமார் தெரிவித்தார்.
இந்நிலையில், நீட் ஆள்மாறாட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட 3 தனியார் மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 3 பேரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சிபிசிஐடி போலீஸார் அறிவுறுத்தினர்.