பாண்டவர்கள் வழியில் அதிமுக, மக்களுக்கான ஆட்சியை செய்து வருகிறது என்று அமைச்சர் ஜெயகுமார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
விக்கிரவாண்டி, நான்குனேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். தமிழை ஆழ்ந்து கற்றவர்கள் அரசு பணிக்கு வரவேண்டும் என்பதற்காக குரூப்-2 தேர்வில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 புதிய பாடத்திட்டத்தின் மூலம் தமிழ் படித்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. பாண்டவர்கள் வழியில் அதிமுக, மக்களுக்கான ஆட்சியை செய்து வருகிறது என்று தெரிவித்தார்.