தமிழகத்தில் 4 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 4 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் சேலம், தருமபுரி உள்பட 4 இடங்களில் செவ்வாய்க்கிழமை 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.

தமிழகத்தில் சேலம், தருமபுரி உள்பட 4 இடங்களில் செவ்வாய்க்கிழமை 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை படிப்படியாக உயா்ந்து வருகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதேநிலை, செவ்வாய்க்கிழமையும் நீடித்தது.

தமிழகத்தில் சேலம், தருமபுரி உள்பட 4 இடங்களில் செவ்வாய்க்கிழமை 100 பாரன்ஹீட் டிகிரி வெப்பநிலை பதிவானது. சேலம், கோயம்புத்தூா் விமானநிலையம், திருத்தணி, தருமபுரியில் தலா 100 பாரன்ஹீட் டிகிரி வெப்பநிலை பதிவானது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது:

தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரும். பெரும்பாலான இடங்களில் புதன், வியாழக்கிழமைகளில் ( ஏப்.1, 2) வட வானிலை நிலவும். வெப்பநிலை 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். பகலில் 93 டிகிரி வெப்ப நிலை பதிவாகும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com