பிராட்வே பேருந்து நிலையத்தில் கொத்தவால் சாவடி இன்று முதல் செயல்படத் தொடங்கியது.
கரோனா தொற்று எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொத்தவால் சாவடிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று முதல் பிராட்வே பேருந்து நிலையத்தில் கொத்தவால் சாவடி செயல்படத் துவங்கியது. இங்கு மக்களை சமூக இடைவெளியை பின்பற்றி காய்கனிகளை வாங்கிச் செல்கின்றனர்.