கரோனா நிவாராண நிதியாக கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 3 பள்ளி மாணவர்கள் தாங்கள் சேமித்த தொகையை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஏ.என்.குமாரிடம் ஒப்படைத்தனர்.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கும் பொருட்டு நிவாரண நிதியாக எளாவூர் வருவாய் ஆய்வாளர் ரதி-ஹரிநாத் ஆகியோரின் 7 ஆம் வகுப்பு படிக்கும் மகன் கிருஷ்ணா அவரது உண்டியல் சேமிப்பான ரூ.760-ஐ கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஏ.என்.குமாரிடம் ஒப்படைத்தார்.
அதேபோல சிறுபுழல்பேட்டையை சேர்ந்த பள்ளி ஆசிரியரான ரமேஷ்-திலகவதியின் மகள்களான டி.ஜெ.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் மகிழ்மொழி நிரல்யா, 2ஆம் வகுப்பு படிக்கும் மகிழ்விழி நிரல்யா ஆகியோர் அவர்களது உண்டியல் சேமிப்பான ரூ.740-ஐ கரோனா நிவாரண நிதிக்காக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஏ.என்.குமாரிடம் வழங்கினார்கள்.
தொடர்ந்து வட்டாட்சியர் மாணவர்களின் நற்செயலை வெகுவாக பாராட்டினார்.