கரோனா நிவாரண நிதிக்காக உண்டியல் சேமிப்பை வழங்கிய பள்ளி மாணவர்கள்

கரோனா நிவாராண நிதியாக கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 3 பள்ளி மாணவர்கள் தாங்கள் சேமித்த தொகையை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஏ.என்.குமாரிடம் ஒப்படைத்தனர்.
கரோனா நிவாரண நிதிக்காக உண்டியல் சேமிப்பை வழங்கிய பள்ளி மாணவர்கள்

கரோனா நிவாராண நிதியாக கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 3 பள்ளி மாணவர்கள் தாங்கள் சேமித்த தொகையை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஏ.என்.குமாரிடம் ஒப்படைத்தனர்.

கரோனா  முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளுக்காக பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கும் பொருட்டு நிவாரண நிதியாக எளாவூர் வருவாய் ஆய்வாளர் ரதி-ஹரிநாத் ஆகியோரின் 7 ஆம் வகுப்பு படிக்கும் மகன் கிருஷ்ணா அவரது உண்டியல் சேமிப்பான  ரூ.760-ஐ கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஏ.என்.குமாரிடம் ஒப்படைத்தார்.

அதேபோல சிறுபுழல்பேட்டையை சேர்ந்த பள்ளி ஆசிரியரான ரமேஷ்-திலகவதியின் மகள்களான டி.ஜெ.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் மகிழ்மொழி நிரல்யா, 2ஆம் வகுப்பு படிக்கும் மகிழ்விழி நிரல்யா ஆகியோர் அவர்களது உண்டியல் சேமிப்பான  ரூ.740-ஐ கரோனா நிவாரண நிதிக்காக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஏ.என்.குமாரிடம் வழங்கினார்கள்.

தொடர்ந்து வட்டாட்சியர் மாணவர்களின் நற்செயலை வெகுவாக பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com