திருவாரூரில் இருவருக்கு கரோனா அறிகுறிகள் இருப்பதாகத் தகவல்

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா அறிகுறிகளுடன் இருவர்
திருவாரூரில் இருவருக்கு கரோனா அறிகுறிகள் இருப்பதாகத் தகவல்

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா அறிகுறிகளுடன் இருவர் சிறப்புச் சிகிச்சைப்  பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அண்மையில் புது தில்லியில் நடந்த இஸ்லாமிய அமைப்பு சார்ந்த  கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த  31 பேர் சென்று கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் 16 பேர் மட்டுமே ஊர் திரும்பியுள்ள நிலையில் இவர்கள், கரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து மாவட்ட சுகாதாரத்துறை  அதிகாரிகள் திருவாரூர், முத்துப்பேட்டை, கூத்தா நல்லூர், பொதக்குடி, மன்னார்குடி பகுதிகளைச் சேர்ந்த 16 பேரையும் கண்டறிந்து தனிமைப்படுத்தினர். மேலும் மியான்மர் நாட்டிலிருந்து வந்து கோவில் வெண்ணி அருகே தங்கியிருந்த 13 பேர்களும் தனிமைப்படுத்தப் பட்டனர்.

இந்நிலையில் திருவாரூர் வண்டிக்காரத் தெருவைச்  சேர்ந்த நபர் உட்பட தனிமைப்படுத்தப்பட்ட அனைவரும் புதன்கிழமை பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் காலையில் நடத்தப்பட்ட ரத்தமாதிரி  பரிசோதனையில் கோயில் வெண்ணி மற்றும் மியான்மர் பகுதியைச் சேர்ந்த இருவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாகவும், இதையடுத்து இருவரும் சிறப்புச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com