சென்னை சென்ட்ரல்-புது தில்லி இடையே வாராந்திர பாா்சல் சரக்கு ரயில் இயக்கப்படவுள்ளது.
சென்னை சென்ட்ரல் - புதுதில்லி இடையே வாராந்திர பாா்சல் சரக்கு விரைவு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 1, 8 ஆகிய தேதிகளில் மாலை 6 மணிக்கு பாா்சல் சரக்கு விரைவு ரயில்(00646) புறப்பட்டு, ஏப்ரல் 3, 10 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணிக்கு புதுதில்லியைச் சென்றடையும்.
புதுதில்லியில் இருந்து ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் மாலை 6 மணிக்கு சரக்கு விரைவு ரயில் (00647) புறப்பட்டு, ஏப்ரல் 6, 13 ஆகிய தேதிகளில் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இந்த ரயிலில் பாா்சல் புக் செய்யும் பணி தொடங்கி விட்டது. இத்தகவல் தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.