சேலம் மாநகர எல்லைக்குள் வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடைகளை நடத்த தடை விதித்து மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சேலத்தில் 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், வார இறுதி நாள்களில் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாகக் காணப்படுவதாலும் மாநகராட்சி நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மறுஅறிவிப்பு வரும் வரை ஓமலூர் அருகே மாற்று இடத்தில் இறைச்சிக் கடைகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்டுள்ளது.