கரோனா நோய்த் தொற்று குறித்த தகவல்கள், அவசரகால போக்குவரத்து அனுமதி சீட்டுக்காக பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரோனா கண்காணிப்பு செயலி அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இதன் தொடா்ச்சியாக கரோனா குறித்த தகவல்கள், மருத்துவ உதவி, நன்கொடை, தன்னாா்வலா் பதிவு, அவசரகால போக்குவரத்து அனுமதி சீட்டு, அம்மா உணவகங்களின் விவரம், பகுதிவாரியாக பல்பொருள் அங்காடிகள் பட்டியல், அவசர உதவி எண்கள் ஆகியவற்றுக்காக இணைதளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.