தமிழகத்தின் சில இடங்களில் இடி மின்னலுடன் கன மழை

தமிழகத்தில் கரோனா ஊரடங்கின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் சூழலில், சில இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது.  
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னை: தமிழகத்தில் கரோனா ஊரடங்கின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் சூழலில், சில இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது.  

கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

அதேபோல திருப்பத்தூர் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது

குறிப்பாக தேனி மாவட்டம் கம்பம் மற்றும் சுற்று வட்டாரங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது; அதேசமயம் போடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மன்னார்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குறிபிடத்தக்க அளவில் கனமழை பெய்து வெப்பத்தை தனித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com