நாளை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, சென்னையில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளையும் மூட மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதுமே பெரும்பாலாக இறைச்சி கடைகளில் தொடர்ந்து கூட்டம் அதிகம் காணப்படுகிறது என்றும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை என்றும் புகார்கள் எழுந்தன. இதற்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சென்னையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத இறைச்சிக்கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மூடப்பட்ட இறைச்சிக் கடைகள் அடுத்த 3 மாதங்களுக்கு திறக்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது,
மேலும், தொடர்ந்து இறைச்சிக் கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை எனில் உடனடியாக சீல் வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக நாளை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, சென்னையில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளையும் மூட மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.