ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை 82,752 வழக்குகள் பதிவு 

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 82,752 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை 82,752 வழக்குகள் பதிவு 

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 82,752 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

கரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த 24 ஆம் தேதி மாலை முதல் அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. ஊரடங்கின் காரணமாக, பொது இடங்களில் 5-க்கும் மேற்பட்ட நபா்கள் கூடுவது காவல்துறையினரால் தடைசெய்யப்பட்டுள்ளது. 

இந்த உத்தரவை மீறி தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறி சாலைகளுக்கும்,பொது இடங்களுக்கும் வருகிறவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா். அதன்படி ஊரடங்கை மீறியதாக, தமிழகத்தில் இதுவரை  82, 752 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

90,918 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ளனா். மேலும், 69,589 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் இதுவரை 24 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com