விரைவில் கோயம்பேடு சந்தைப் பகுதியில் சுரங்கப்பாதை தெளிப்பான்: ஓ. பன்னீர்செல்வம்

கோயம்பேடு சந்தைப் பகுதியில் சுரங்கப்பாதை தெளிப்பான்கள் (Tunnel Sprayer) அமைக்கும் பணிகளை ஓரிரு நாட்களில் முடிக்க  துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
விரைவில் கோயம்பேடு சந்தைப் பகுதியில் சுரங்கப்பாதை தெளிப்பான்: ஓ. பன்னீர்செல்வம்

கோயம்பேடு சந்தைப் பகுதியில் சுரங்கப்பாதை தெளிப்பான்கள் (Tunnel Sprayer) அமைக்கும் பணிகளை ஓரிரு நாட்களில் முடிக்க  துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தலைமைச் செயலகத்தில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் உயர் அதிகாரிகளுடன் ஆய்வினை மேற்கொண்டார்.

அப்போது, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் கோயம்பேடில் ஆற்றி வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில்,  கோயம்பேடு மொத்த காய்கறி மற்றும் வணிக அங்காடி வளாகத்தினுள் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளான முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி தெளித்தல், குப்பைகளை அகற்றுதல் மற்றும் வாடிக்கையாளர்கள் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்றவற்றை உறுதிப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், துணை முதலமைச்சரின் அறிவுரைக்கிணங்க பொதுமக்கள் / வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதை கட்டயாமாக்குவதற்காக தினந்தோறும் 5000-க்கு மேற்பட்ட முகக்கவசங்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 50000-க்கும் மேற்பட்ட முகக்கவசங்கள் பொதுமக்களுக்கு விலையின்றி வழங்கப்பட்டுள்ளன.

சென்னை குடிநீர் வாரியம் மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய துறைகளின் உதவியுடன் கோயம்பேடு வணிக வளாக அங்காடியின் உட்புற சாலைப்பகுதிகளில் தினந்தோறும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சாலைகள் சுத்தம் செய்யப்படுகின்றன. மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தானியங்கி பறக்கும் இயந்திரத்தின் மூலம் கோயம்பேடு வணிகவளாக அங்காடியின் உள்பகுதிகளிலும் கிருமி நாசினி தினமும் தெளிக்கப்பட்டு வருகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டது.

கோயம்பேடு வணிகவளாக அங்காடியின் வெளிப்பகுதிகளில் கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக, வாகனங்கள் நுழையும் நுழைவாயில்கள் மற்றும் வெளிவாயில்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றது என்றும், சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவ குழுக்கள் வரவழைக்கப்பட்டு, காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டுவரும் வாகனங்களின் ஓட்டுனர், நடத்துனர் முதல் கோயம்பேடு வணிக வளாகத்துக்கு வரும் பொதுமக்கள் / வாடிக்கையாளர்கள் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என மருத்துவப் பரிசோதனை செய்த பிறகே அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், கோயம்பேடு மொத்த காய்கறி அங்காடி வளாகம் மற்றும் உணவு தானிய அங்காடி வளாகங்களில், அவ்வப்போது சேரும் குப்பைகள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு பிறகு அந்த இடங்களில் தினமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

சுகாதாரப்பணிகளை துரிதப்படுத்துவதற்காகவும் மற்றும் அங்காடிகளை சுத்தமாக வைத்துக்கொள்வதற்காகவும் கூடுதல் பணியாளர்களை அமர்த்துமாறு ஒப்பந்தக்காரர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு, கொரோனா தொற்றை தடுக்கும் பணிகள் தினமும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது. 

அப்போது, கோயம்பேடு மொத்த வணிக வளாக அங்காடியில் அதிக பொதுமக்கள் வரத்துக்கொண்ட 10 நுழைவாயில்கள் கண்டறியப்பட்டு, பொதுத்துறை நிறுவனங்களின் உதவியுடன் சுமார் ரூ 17.0 இலட்சம் செலவில் சுரங்கப்பாதை தெளிப்பான்கள் “Tunnel Sprayer”” அமைக்கும் பணிகளை ஓரிரு நாட்களில் முடிக்க  துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com