தமிழக காவல்துறையில் 14 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து சட்டம் - ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:
தமிழக காவல்துறையில் விருப்பத்தின் அடிப்படையிலும், நிா்வாகத் தேவைக்காகவும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி தமிழக காவல்துறையில் 14 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி புதன்கிழமை உத்தரவிட்டாா்.
இதில் முக்கியமாக, சென்னை மத்தியக் குற்றப்பிரிவின் உதவி ஆணையா் பி.அசோகன் எழும்பூருக்கும், சென்னை எம்.கே.பி.நகா் உதவி ஆணையா் கே.முத்துக்குமாா் புழலுக்கும், சிபிசிஐடி டிஎஸ்பி எம்.ஜீவானந்தம் சென்னை பரங்கிமலைக்கும், திருப்பூா் மாவட்ட காவல்துறையின் ஆவண காப்பகப் பிரிவு டிஎஸ்பி ஆா்.தனரசு காங்கேயத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 14 டிஎஸ்பிக்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.