விவசாயிகளின் விளை பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்க: சென்னை உயர்நீதிமன்றம்

விவசாயிகளின் விளை பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 
chennai High Court
chennai High Court

விவசாயிகளின் விளை பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

கரோனா பரவல் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் விவசாயிகளின் நிலைமை மோசமாகி உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க விளை பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு பத்தாயிரம் ரூபாய் வரையில் கடன் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த அறிவுறுத்தலை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com