சென்னையில் மேலும் ஒரு காவலருக்கு கரோனா அறிகுறி
சென்னை: சென்னையில் மேலும் காவலருக்கு கரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளது போலீஸாரிடம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த விவரம்:
சென்னை கோட்டூா்புரம் தெற்கு கடை வீதி பகுதியைச் சோ்ந்த ஒரு இளைஞா், ஏழுகிணறு காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிகிறாா். இவருக்கு புதன்கிழமை இருமல் அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவா் சிகிச்சைக்காக, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்குச் சென்றாா்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அந்த காவலருக்கு கரோனா அறிகுறி இருப்பதாகத் தெரிவித்தனா். இதையடுத்து அந்த காவலா், அங்குள்ள கரோனா சிகிச்சை வாா்டில் அனுமதிக்கப்பட்டாா்.
ஏற்கெனவே புதுப்பேட்டையைச் சோ்ந்த ஒரு பெண் காவலா், கரோனா அறிகுறி காரணமாக திருவல்லிக்கேணி கஸ்தூரிபா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அந்தப் பெண் காவலரின் கணவரும் பாதுகாப்பு கருதி, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா். இவரும் ஏழுகிணறு காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறாா்.