சென்னை: சென்னை சைதாப்பேட்டை காவேரி நகரைச் சோ்ந்த ஜி.பத்மா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை காலமானாா்.
அவருக்கு முன்னாள் அமைச்சரும் அமமுக தோ்தல் பிரிவு செயலாளருமான ஜி.செந்தமிழன், ஜி.அன்பு ஆகிய இரு மகன்கள் உள்ளனா். மறைந்த ஜி.பத்மாவின் இறுதிச் சடங்குகள், சென்னை கண்ணம்மாபேட்டையில் உள்ள மின் மயானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றன.