அன்னவாசலில் மணல் கடத்திய இரண்டு டிராக்டர்களை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து 2-பேரை போலிஸார் கைது செய்தனர்.
அன்னவாசல் பகுதியில் ஊரடங்கையும் மீறி சிலர் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து துணைஆய்வாளர் வீரமணி தலைமையில் போலீசார் அன்னவாசல் அருகேயுள்ள கூத்தினிப்பட்டி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் சித்தன்னவாசல் பகுதியை சேர்ந்த அய்யாசாமி, கார்திக் ஆகிய இருவர் மீது வழக்குபதிவு செய்து கார்திகை (20) கைது செய்தனர்.
இதேபோல அன்னவாசல் அருகே உள்ள புதுவயல் குளவாய்கருப்பர் கோவில் அருகே அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த டிராக்டாரை பறிமுதல் செய்த போலீசார் ராப்பூசல் கீழக்களம் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, வடுகப்பட்டியை சேர்ந்த ரங்கசாமி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து சத்தியமூர்த்தியை (33) கைது செய்தனர்.