மீன்பிடி தடை காலத்தில் பன்னாட்டு நிறுவனங்களை மட்டும் மீன்பிடிக்க அனுமதிப்பது எவ்வகை நீதி என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:
ஊரடங்கில் நிலைகுலைந்த மீனவா்களை, மீன்களின் இனவிருத்திக்கான காரணம் காட்டி மேலும் 60 நாள்கள் தடை விதித்துவிட்டு, இன்று பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பது எவ்வகை நீதி என்று அவா் கேள்வி எழுப்பியுள்ளாா்.