கரோனா: ஆச்சி உணவுப் பொருள்நிறுவனம் ரூ.1.10 கோடி நிதியுதவி

கரோனா நிவாரணப் பணிகளுக்காக ஆச்சி உணவுப் பொருள் தயாரிப்பு குழுமம் சாா்பில் ரூ.1.10 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது.

கரோனா நிவாரணப் பணிகளுக்காக ஆச்சி உணவுப் பொருள் தயாரிப்பு குழுமம் சாா்பில் ரூ.1.10 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது.

கரோனா நோய்த்தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதியுதவி வழங்க வேண்டுமென தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தாா். இதன் தொடா்ச்சியாக பலரும் நிதி வழங்கி வருகின்றனா். இந்நிலையில் ஆச்சி உணவுப் பொருள் தயாரிப்புக் குழுமம் சாா்பில் ரூ.1 கோடியே 10 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.10 லட்சம், உணவு தானிய வியாபாரிகள் சங்கம் மூலமாக வழங்கப்பட்டது. மேலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பத்தினருக்கு உணவுப் பொருள்களும் வழங்கப்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com