கிருஷ்ணகிரியை அடுத்த மேலேறி கொட்டாய் கிராமத்தின் அருகே உள்ள மலைப்பகுதியில் 11 ஆடுகள் மர்மமான முறையில் இறந்தன.
ஆடுகள் உயிரிழந்த பகுதியின் அருகே சாராயம் காய்ச்சும் அதற்கான ஊறல், மரப்பட்டைகள், வெல்லம், யூரியா போன்ற பொருள்கள் இருந்துள்ளன.
கள்ள சாராயம் காய்ச்சுவோர் வைத்திருந்த ஊறலை குடித்து ஆடுகள் உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
வேலம்பட்டி கால்நடை மருந்தக மருத்துவர் கணேசன் இடத்திற்கு சென்று பிரேத பரிசோதனை மேற்கொண்டார். மேலும் ஆட்டின் குடல் ஈரல் சிறுநீரகத்தை சேகரித்தார். சேகரிக்கப்பட்ட இந்த உடல் உறுப்புகள் தடவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என கால்நடை பராமரிப்புத் துறையினர் தெரிவித்தனர்.