50 ஆயிரம் முகக்கவசம் வழங்கிய தன்னார்வலர்

சீர்காழியில் 50 ஆயிரம் முகக்கவசத்தை தன்னார்வலர் வழங்கினார். 
50 ஆயிரம் முகக்கவசம் வழங்கிய தன்னார்வலர்

சீர்காழியில் 50 ஆயிரம் முகக்கவசத்தை தன்னார்வலர் வழங்கினார். 

சீர்காழி சரகத்தில் கரானா விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தன்னலமற்ற சேவைகள் ஆற்றி வரும் அனைத்து காவல்துறை நண்பர்களுக்கும் உபயோகிக்கும் விதமாக பாதுகாப்பு முகக்கவசம் 1800 மற்றும் அவசரகால தேவைக்கு பயன்படும் 10 பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் சீர்காழி , கொள்ளிடம் ஊராட்சிகளை சேர்ந்த  பொதுமக்கள் என சுமார் 50 ஆயிரம் முகக்கவசங்களை எல். ரமேஷ் பாபு நினைவு சேவைகள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் சீனுவாசன் ஆலோசனை படி, காவல்துறை துணை கண்காணிப்பாளர் வந்தனா முன்னிலையில் வழங்கப்பட்டது. 

உடன் பொறியாளர் ராஜராஜன், சண்முகம் பிரகாஷ் டிரேடர்ஸ் மற்றும் பொறியாளர் அ.வீரா (எ) வீரபத்திரன் உள்ளிட்டோர் இருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com