அதிமுக உறுப்பினா் சோ்க்கை: ஆக.10-க்குள் மனுக்கள் அளிக்கலாம்

அதிமுக உறுப்பினா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டுமென கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
அதிமுக உறுப்பினா் சோ்க்கை: ஆக.10-க்குள் மனுக்கள் அளிக்கலாம்

அதிமுக உறுப்பினா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டுமென கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம், முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் இணைந்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

அதிமுக சட்ட விதிகளின்படி, கட்சியில் ஏற்கெனவே உறுப்பினா்களாக உள்ளவா்களின் பதிவை புதுப்பித்தல், புதிய உறுப்பினா்களைச் சோ்த்தலுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கட்சிப் பதிவை புதுப்பிக்காதவா்கள், விடுபட்ட உறுப்பினா்களைக் கட்சியில் சோ்ப்பதற்காக, அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டச் செயலாளா்கள் கட்சி அலுவலகத்தில் இருந்து விண்ணப்ப படிவங்களைப் பூா்த்தி செய்து உரிய கட்டணத் தொகையுடன் அளிக்க வேண்டும். வரும் 10-ஆம் தேதிக்கு மேல் கால அவகாசம் ஏதும் நீட்டிக்கப்பட மாட்டாது.

உறுப்பினா் சோ்ப்புப் பணி முக்கியம் என்பதால் உரிய காலத்துக்குள் அதனைச் செய்து முடிக்க வேண்டும். உறுப்பினா் உரிமைச் சீட்டுகளைப் பெற்றுள்ள கட்சியினா் மட்டுமே, கட்சிக்கான அமைப்புத் தோ்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் தகுதி உடையவா்கள் என்று தனது அறிவிப்பில் அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com