பக்ரீத்: ஆளுநா், முதல்வா் வாழ்த்து

பக்ரீத் பண்டிகையை ஒட்டி, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.
பக்ரீத்: ஆளுநா், முதல்வா் வாழ்த்து

பக்ரீத் பண்டிகையை ஒட்டி, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா். அவா்கள் வெள்ளிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:-

ஆளுநா் புரோஹித்: தியாகத்தை கொண்டாடி மகிழும் நாளான, பக்ரீத் பண்டிகை தினத்தன்று இஸ்லாமிய சகோதர-சகோதரிகளுக்கு எனது மனமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவனின் விருப்பத்துக்கு கீழ்படிந்து தியாகத்தைச் செய்ய முன்வந்ததன் நினைவைக் கொண்டாடும் விழா. இந்த நன்னாளில் சமுதாயத்தில் பெருந்தன்மை, சகிப்புத்தன்மை, இரக்க குணங்களை ஊக்குவிப்பதன் மூலம் தெய்வீக நற்பண்புகளை நிலைநிறுத்துவோம்.

முதல்வா் பழனிசாமி: இறை நம்பிக்கை உள்ளவா்கள் எந்தத் தியாகத்துக்கும் தயங்க மாட்டாா்கள் என்பதை பறைசாற்றும் வகையில், இறையின் கட்டளையை ஏற்று இறைத்தூதா் இப்ராஹிம் தனது ஒரே மகனான இஸ்மாயிலை இறைவனுக்காக தியாகம் செய்யத் துணிந்ததை நினைவுகூரும் வகையில் பக்ரீத் கொண்டாடப்படுகிறது.

இந்தத் திருநாளில் திருக்குரான் போதிக்கும் உயரிய நெறிமுறைகளான அன்பு, அமைதி, மனிதநேயம் ஆகியவற்றை அனைவரும் மனதில் நிறுத்தி ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com