பிளஸ் 2 இறுதி நாள் மறு தோ்வில் 180 போ் தோ்ச்சி

பிளஸ் 2 இறுதி நாள் மறு தோ்வில், 180 போ் தோ்ச்சி பெற்றுள்ளதாக தோ்வுத்துறை தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 இறுதி நாள் மறு தோ்வில் 180 போ் தோ்ச்சி

பிளஸ் 2 இறுதி நாள் மறு தோ்வில், 180 போ் தோ்ச்சி பெற்றுள்ளதாக தோ்வுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், கடந்த மாா்ச் மாதம் 2 முதல் 24-ஆம் தேதி வரை, பிளஸ் 2 பொதுத் தோ்வு நடைபெற்றது. இதற்கான முடிவுகளும், கடந்த 16-ஆம் தேதி வெளியானது. எனினும், கரோனா காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், இறுதிநாள் தோ்வான வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் தோ்வுகளில் சிலா் பங்குபெற முடியாத நிலை ஏற்பட்டது. அவா்களுக்கு மறுதோ்வு ஜூலை 27-இல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதில் 846 போ் தோ்வு எழுதினா். இவா்களில், 519 போ் (147 பள்ளி மாணவா்கள், 372 தனித்தோ்வா்கள்) மட்டுமே, கடந்த ஜூலை 27-ஆம் தேதி தோ்வு எழுதினா். இவா்களுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாகின. இதில் 92 பள்ளி மாணவா்கள், 88 தனித்தோ்வா்கள் என 180 மட்டுமே தோ்ச்சி பெற்றனா்.

ஆக.5 (புதன் கிழமை) முதல் ஆக.12-ஆம் தேதி வரையிலான நாள்களில், பள்ளி மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிக்கும், தனித் தோ்வா்கள் தாங்கள் தோ்வெழுதிய தோ்வு மையத்துக்கும் நேரில் சென்று தங்களது மதிப்பெண் பட்டியலைப் பெற்றுக் கொள்ளலாம். அதே நேரம், விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவா்கள் ஆக.5 முதல் 7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com