ஏடிஎம்மில் இருந்த ரூ.10 ஆயிரத்தை மாவட்ட எஸ்பியிடம் ஒப்படைத்த இளைஞர்: குவியும் பாராட்டு

காஞ்சிபுரம் அருகே ஏடிஎம் மையத்தில் இருந்த ரூ.10 ஆயிரத்தை மாவட்ட எஸ்.பியிடம் இளைஞர் வழங்கியதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஏடிஎம் பணத்தை ஒப்படைத்த பிரபுதாஸ்
ஏடிஎம் பணத்தை ஒப்படைத்த பிரபுதாஸ்

காஞ்சிபுரம் அருகே ஏடிஎம் மையத்தில் இருந்த ரூ.10 ஆயிரத்தை மாவட்ட எஸ்.பியிடம் இளைஞர் வழங்கியதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

காஞ்சிபுரம் அருகே உள்ள மேல்கதிர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபுதாஸ். இவர் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் காஞ்சிபுரம் அருகேயுள்ள கீழம்பி என்ற இடத்தில் உள்ள ஏடிஎம்முக்கு பணம் எடுக்க சென்றிருக்கிறார்.

அப்போது அந்த ஏடிஎம்மில் ரூபாய் பத்தாயிரம் இருந்ததை கண்டு திடுக்கிட்டார் நெட்வொர்க் பிரச்சனையால் பணம் வரவில்லை என்று பணம் எடுக்க வந்தவர் பணம் வந்தது தெரியாமல் சென்றிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இவர், பணம் ரூபாய் 10 ஆயிரத்தை காஞ்சிபுரம் எஸ்.பி சண்முக பிரியாவிடம் நேரில் ஒப்படைத்தார்.

இத்தொகையை உரியவரிடம் ஒப்படைக்குமாறு மாவட்ட எஸ்பி இடம் கேட்டுக் கொண்டார். பிரபுதாஸ் நேர்மையை காஞ்சிபுரம் எஸ்.பி சண்முகப்பிரியா உட்பட அங்கிருந்த காவல்துறை உயரதிகாரிகளும் பாராட்டினார்கள். உரிய விசாரணை நடத்தி பணம் பத்தாயிரம் உரிய நபரிடம் ஒப்படைக்கப்படும் என எஸ்.பி சண்முகப்பிரியா பிரபு தாஸிடம் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com