தமிழகத்தில் சட்டப் படிப்புக்கு ஆகஸ்ட் 5 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப் படிப்புக்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில் சட்டப் படிப்புக்கு ஆகஸ்ட் 5 முதல் ஆன்லைனில் விண்ணப்பக்கலாம்
தமிழகத்தில் சட்டப் படிப்புக்கு ஆகஸ்ட் 5 முதல் ஆன்லைனில் விண்ணப்பக்கலாம்


தமிழகத்தில் ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

பொதுமுடக்கம் காரணமாக இந்த கல்வியாண்டுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுவது தாமதமாகி உள்ளது. தமிழகத்தில் 11 அரசு சட்டக் கல்லூரிகள்  செயல்பட்டு வருகின்றது. 

அந்தவகையில், ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆகஸ்ட் 10 முதல் நேரடியாக விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. 

பூர்த்தி செய்ய விண்ணப்பங்களை http://tndalu.ac.in/ என்ற இணையதளத்தில் செப்டம்பர் 4-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார். 

மேலும், மூன்றாண்டு சட்டப் படிப்பு மற்றும் முதுகலை படிப்புக்கான விண்ணப்பங்களை வழங்கப்படும் தேதி பின்னர் அறிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com