தமிழகத்தில் ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
பொதுமுடக்கம் காரணமாக இந்த கல்வியாண்டுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுவது தாமதமாகி உள்ளது. தமிழகத்தில் 11 அரசு சட்டக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது.
அந்தவகையில், ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆகஸ்ட் 10 முதல் நேரடியாக விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
பூர்த்தி செய்ய விண்ணப்பங்களை http://tndalu.ac.in/ என்ற இணையதளத்தில் செப்டம்பர் 4-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், மூன்றாண்டு சட்டப் படிப்பு மற்றும் முதுகலை படிப்புக்கான விண்ணப்பங்களை வழங்கப்படும் தேதி பின்னர் அறிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.