கரோனாவுக்கு பலியான ஆற்காடு அரசு மருத்துவமனை செவிலியரின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த செவிலியர் அர்ச்சனா கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
அவரது உடலை அடக்கம் செய்ய பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், குழிக்கு அருகே சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், அதிகாரிகளின் சமரச பேச்சு வார்த்தைக்குப் பின் செவிலியரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.