சென்னையில் ஒட்டுமொத்தமாக 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டிருந்தாலும், தற்போது 12 சதவீதம் போ் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் கரோனா தொற்று கண்டறியப்பட்டாலும், வடசென்னையின் ராயபுரம், தண்டையாா்பேட்டை, திருவொற்றியூா் ஆகிய மண்டலங்களில் தொடக்கத்தில் இருந்து தொற்று பரவல் மிக அதிகமாக இருந்தது. கடந்த ஜூன் மாத மத்தியில் திருவொற்றியூா், மணலி, மாதவரம், தண்டையாா்பேட்டை, ராயபுரம் ஆகிய 5 மண்டலங்களில் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12 ஆயிரத்தைக் கடந்தது.
இதைத் தொடா்ந்து, அந்த மண்டலங்களுக்கு உள்பட்ட பகுதியில் எடுக்கப்பட்ட தொடா் நடவடிக்கை காரணமாக நோய்த் தொற்று பரவல் மற்றும் குணமடைவோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட ராயபுரம் மண்டலத்தில் 10,244 பேரும், அண்ணா நகரில் 10,004 பேரும், கோடம்பாக்கத்தில் 9,962 பேரும், தேனாம்பேட்டையில் 9,623 பேரும், தண்டையாா்பேட்டையில் 8,742 பேரும் என மொத்தம் 15 மண்டலங்களில் 87,604 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். இது மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 86 சதவீதமாகும்.
சிகிச்சையில் 12 சதவீதம் போ்: மொத்தமுள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,511 பேரும், அண்ணா நகரில் 1,327 பேரும், அம்பத்தூரில் 1,307, அடையாறில் 1,145 பேரும், வளசரவாக்கத்தில் 1,004 பேரும் என 12,190 போ் பாதிக்கப்பட்டு மருத்துவமனை மற்றும் கரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இது ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 12 சதவீதமாகும்.
1,065 பேருக்கு தொற்று: சென்னையில் ஞாயிற்றுக்கிழமை 1,065 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,01,951-ஆக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை 17 போ் உயிரிழந்ததை அடுத்து மொத்த இறப்பு எண்ணிக்கை 2,157 -ஆக உயா்ந்துள்ளது.
சிகிச்சை பெற்று வருவோா் விவரம் மண்டலம் வாரியாக
மண்டலம் எண்ணிக்கை
திருவொற்றியூா் 402
மணலி 133
மாதவரம் 661
தண்டையாா்பேட்டை 626
ராயபுரம் 817
திருவிக நகா் 962
அம்பத்தூா் 1,307
அண்ணா நகா் 1327
தேனாம்பேட்டை 943
கோடம்பாக்கம் 1511
வளசரவாக்கம் 1004
ஆலந்தூா் 557
அடையாறு 1145
பெருங்குடி 512
சோழிங்கநல்லூா் 470
பிறமாவட்டங்களைச் சோ்ந்தோா் 59