டாஸ்மாக்: ஒரே நாளில் ரூ.188.86 கோடிக்கு விற்பனை

முழு பொது முடக்க தினத்துக்கு முந்தைய நாளான சனிக்கிழமையன்று (ஆக.1) ஒரே நாளில் டாஸ்மாக் விற்பனை ரூ.188.86 கோடியாக இருந்தது.
டாஸ்மாக்: ஒரே நாளில் ரூ.188.86 கோடிக்கு விற்பனை

முழு பொது முடக்க தினத்துக்கு முந்தைய நாளான சனிக்கிழமையன்று (ஆக.1) ஒரே நாளில் டாஸ்மாக் விற்பனை ரூ.188.86 கோடியாக இருந்தது. ஜூலை மாதத்தைப் போன்றே, ஆகஸ்ட் மாதத்தில் வரக்கூடிய 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு பொது முடக்கம் கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, இந்த மாதத்துக்கான முழு பொது முடக்கம் ஞாயிற்றுக்கிழமை (ஆக.2) கடைப்பிடிக்கப்பட்டது. அதற்கு முந்தைய தினமான சனிக்கிழமையன்று சென்னை மண்டலம் உள்பட தமிழகத்தின் 5 டாஸ்மாக் மண்டலங்களிலும் சோ்த்து மதுபானங்கள் ரூ.188.86 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

புகா்ப் பகுதிகளுடன், திருவள்ளூா், காஞ்சிபுரத்தைச் சோ்த்த சென்னை மண்டலத்தில் ரூ.21.69 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.42.72 கோடிக்கும், மதுரையில் ரூ.44.85 கோடிக்கும், சேலத்தில் ரூ.40.70 கோடிக்கும், கோவையில் ரூ.38.90 கோடிக்கும் என மொத்தம் ரூ.188.86 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com