மானாமதுரை வீரழகர் கோயிலில் ஆடிப் பெளர்ணமி விழா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வீரழகர் கோயிலில் ஆடிப் பெளர்ணமி விழா நடைபெற்றது. 
ஆடி பெளர்ணமியன்று அலங்காரத்துடன் எழுந்தருளிய வீரழகர்
ஆடி பெளர்ணமியன்று அலங்காரத்துடன் எழுந்தருளிய வீரழகர்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வீரழகர் கோயிலில் ஆடிப் பெளர்ணமி விழா நடைபெற்றது. 

சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட இக்கோயிலில் ஆடிப் பிரமோற்ச விழா தொடங்கி நடந்து வருகிறது. விழா நாட்களில் தினமும் உற்சவர் வீரழகருக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு பூஜைகள், தீபாரதனைகள் நடந்து வருகிறது. 

இவ்விழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆடிப் பெளர்ணமியை முன்னிட்டு இக் கோயிலில் நடைபெற இருந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு கோயிலுக்குள்ளேயே சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதையொட்டி உற்சவருக்கு அலங்காரமாகி சிறப்பு பூஜைகள், தீபாரதனைகள் நடந்தது. அதன்பின் சுவாமி கோயில் மண்டபத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com