திருச்சி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக, அக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலர் கே.ஏ.எம். முகம்மது அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:
"இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும், பேராசிரியருமான கே.எம்.காதர் மொகிதீன், இந்த அசாதாரணமான சூழ்நிலையிலும் சென்னை தலைமை நிலையம் காயிதே மில்லத் மன்ஜிலில் தொடர் பணிகளாற்றி வந்த நிலையில் சற்று உடல் நிலை குன்றியுள்ளார்.
இதன்காரணமாக திருச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் உள்ள தேசியத் தலைவர் பூரண நலம் பெற அனைவரும் பிரார்த்திக்க வேண்டுகிறோம்." என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.