சென்னை: சென்னையில் இ-பாஸ் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.
கரோனா பரவலைத் தடுக்க ஆறாவது ஆவது கட்டமாக பொதுமுடக்கம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளதுடன், ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கும், மாநிலத்துக்கும் செல்வதற்கு இ-பாஸ் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலூரில் ரூ.1,500 கொடுத்தால் 2 மணி நேரத்தில் எந்த மாவட்டம், மாநிலத்துக்கும் இ-பாஸ் பெற்றுத்தரப்படும் என கவர்ச்சிகர விளம்பரம் வெளியிட்டு பணமோசடியில் ஈடுபட்டவரை செவ்வாயன்று காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் சென்னையில் இ-பாஸ் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘சென்னையில் இ-பாஸ் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே இவ்வாறு இ-பாஸ் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் இத்தகைய இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்’ என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.