கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்ட எல்லையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 வடமாநில தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
பிகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தை சேர்ந்த 4 தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்டம் காசி பாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை கேம் பணியாற்ற தமிழ்நாடு கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி ஆகஸ்ட் 5-ஆம் தேதி இரவு வந்து சேர்ந்தனர்.
இவர்கள், ஒரு காரில் திருப்பூர் நோக்கி கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக வியாழக்கிழமை அதிகாலை சென்றனர்.
கிருஷ்ணகிரி - தருமபுரி மாவட்ட எல்லையான அகரம் மேம்பாலம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரியின் மீது கார் வேகமாக மோதியது.
இதில், வடமாடு தொழிலாளர்களான அம்புஜ் குமார்(23), உமேஷ் குமார் (46) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த சுஜித்தீஷ் குமார்(18), அசோக் குமார் (24, சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ஆர் டேனியல் சக்கரவர்த்தி (25) ஆகியோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டினம் காவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.