கருணாநிதி 2ம் ஆண்டு நினைவு தினம்: நினைவிடத்தில் மு.க ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இரண்டாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 
கருணாநிதி 2ம் ஆண்டு நினைவு தினம்: நினைவிடத்தில் மு.க ஸ்டாலின் மலர்தூவி மரியாதை


 
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இரண்டாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் இரண்டாமாண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

திமுக பொருளாளர் துரை முருகன், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கனிமொழி, கலாநிதி வீராசாமி உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து, கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் அவரது திருஉருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்தார். 

அதைத்தொடர்ந்து, முன்களப் பணியாளர்களுக்கு நலத்திட்ட  உதவிகளை வழங்கினார் ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com