தமிழக காவல்துறையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள உத்தரவு :
1. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அருண் பாலகோபாலன் ஐபிஎஸ் சென்னை சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர்-2 ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. சென்னை சைபர் குற்றப் பிரிவு எஸ்பி-2 ஆக இருந்த ஓம்பிரகாஷ் மீனா ஐபிஎஸ், சென்னை காவல்துறை நிர்வாக ஏ.ஐ.ஜி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
3. சென்னை காவல்துறை நிர்வாக ஏ.ஐ.ஜி.யாக இருந்த சிபி சக்ரவர்த்தி ஐபிஎஸ், சென்னை, சிபிசிஐடி - சைபர் செல் காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
4. சென்னை, சிபிசிஐடி - சைபர் செல் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ஏ. ஜெயலட்சுமி ஐபிஎஸ், தமிழ்நாடு காவல் அகாடமியின் காவல்துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
5. தமிழ்நாடு காவல் அகாடமியின் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ஜெயச்சந்திரன், தமிழ்நாடு கமாண்டோ படைப்பிரிவு காவல்துறை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
6. தமிழ்நாடு கமாண்டோ படைப்பிரிவு காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ஷியாமலா தேவி, சென்னை நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு காவல்துறை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
7. சென்னை நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த கண்ணம்மாள், சென்னை மாநகர - மத்திய குற்றப்பிரிவு துறை துணை ஆணையர் - 2 ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
8. சென்னை மாநகர - மத்திய குற்றப்பிரிவு துறை துணை ஆணையர் - 2 ஆக இருந்த தீபா சத்யன், அம்பத்தூர் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
9. அம்பத்தூர் துணை ஆணையராக இருந்த நிஷா, சென்னை சைபர் பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் - 2 ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.