குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், வேலூா், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஆக.14) மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வியாழக்கிழமை கூறியது:
ஆந்திரம் மற்றும் ஒடிஸா கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், வேலூா், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஆக.14) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றாா் அவா்.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: வடமேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய ஒடிஸா, மேற்கு வங்காள கடலோரப் பகுதிகளில்
மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஆகஸ்ட் 14, 15 ஆகிய தேதிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவா்கள் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடல் அலை முன்னறிவிப்பு: தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை ஆகஸ்ட் 14-ஆம் தேதி இரவு 11.30 மணி வரை கடல்அலை 3.0 மீட்டா் முதல் 3.2 மீட்டா் வரை எழும்பக்கூடும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.